-
Tell a friend
-
Topics
-
Posts
-
நன்றிகள் பல. மிகவும் அருமையான கருத்துகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
-
தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை நோக்கி தார்மீக உதவியைக் கோரும் சகோதரர்களாக இன்று தமிழீழ தேசவிடுதலை கோரும் இனமொன்றின் சிந்தனைப் போக்கைப் பொதுமையாக நோக்கினால், அறிவின் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய எமது தலைமை இன்று இவற்றை அறிய நேருமாயின் இந்த மக்களுக்காகவா போராடினோம் என்ற எண்ணமே மேலெழும். தமிழீழத்தை இந்தியா பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என்ற முடிவு தெரிந்தபோதும், அதாவது இந்திராகாந்தி அம்மையாரவர்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டை நாம் பாதுகாப்போம் என்ற முன்மொழிவோடு யே.ஆரைப் பார்த்தசாரதி ஊடாக அணுகியபோதும் தமிழரது உரிமைகளை மறுத்ததோடு பின்வந்த ஆண்டுகளில் இந்திராகாந்தி அம்மையாரின் மறைவோடு மிகத்தந்திரமாகத் தமிழரோடு மோதலை ஏற்படுத்தும் களமாக யே.ஆர் சிங்களத்தின் சிறந்த அரசியல் விற்பனனாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைக் கையாண்டதோடு, தமிழருக்கும், இந்திய அரசுக்கும் இடையே முரணை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றதோடு, அதன் தொடராக இன்றுவரை மிகக் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட 13ஆவது திருத்தமெனச் சுட்டப்படும் மாகாணசபைகளைக்கூட தொடர்ந்துவரும் அரசுகள் நடைமுறைப்படுத்தாது தட்டிக்கழித்தவருவதை நாம் கண்டுவருகின்றோம். (இந்த லட்சனத்தில் ரணிலுக்கு,சஜித்துக்கு, அனுரவுக்கு வாக்குக் கேட்கும் தமிழ் அரசியல் விற்பன்னர்கள் தமிழரை விற்றுக்கொண்டிருப்பது வேறுகதை) மிகவும் அருகிலே மொழி, கலை,பண்பாடு என்பவற்றோடு ஒன்றுக்குள் ஒன்றான தமிழகத்தையும், தமிழக மக்களையும் நாம் வென்றெடுத்து எம்மோடு இணைத்துப் பயணிக்க முடியாத சூழலில் பகையற்ற நிலையிலாவது வைத்திருக்க வேண்டுமென்ற பொதுவான நோக்குநிலை அவசியமற்றதா? சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டமைத்து அதனை மிகப்பெரும் இராணுவபூதத்தின் மீது நிலைநிறுத்தி வைத்துள்ள நிலையில் எமக்கு ஒரு துன்பமென்றால் குரல்கொடுக்கும் நிலையிலாவது தமிழகத்தைப் பேணுதல் வேண்டாமா? ஒருவேளை புலத்தமிழர் போதுமென்றால் ஏமாற்றமே மிஞ்சும். எங்களுக்குப்பின் தாயகத்துக்காக ஏதாவது எமது அடுத்த தலைமுறை, மூத்த தலைமுறையின் அர்ப்பணிப்போடு பெரிய அளவில் செய்யும் என்று எண்ணினால் ஏமாற்றமே. போராட்டத்தின் பின் தளமாக இருந்த தமிழகத்தையும், தமிழீழத்தையும் உணர்வுரீதியாகப் பிரிப்பதிலேயே இந்திய – சிங்கள அரசுகளின் பாதிவெற்றியை சாத்தியமாக்குகிறார்கள் என்பதை ஈழத்தமிழினம் அறிவுசார் புலமையோடு நோக்கவேண்டும். ஒப்பந்தம் போட்டுக் கொள்ளையிடும் (இந்திய) பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இது ஒரு சிறிய அளவிலான, ஆனால் அன்றாடப் பிழைப்புக்குக் கரையோரங்களை நாடும் எமது மீனவர்களைப் பாதிக்கும் செயற்பாடு. இதனை நிறுவனரீதியாக அணுகுதல் அவசியமானது. அதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் வெற்றியளிக்கவில்லை. வட-கிழக்கின் மீனவர்கள் ஒருங்கிணைந்த நிறுவனங்களை உருவாக்கி, அதனைச் செயல்நெறியோடு இயங்கவைப்பதும், அவற்றின் ஊடாகத் திணைக்களங்கள், அமைச்சுகளை அணுகி அழுத்தங்களைக் கொடுப்பதுமே ஆரோக்கியமானது. நாம் நேரடியாகத் தமிழக மீனவரோடு முரண்படுவதோ, மொட்டையடித்து அனுப்புவதை வரவேற்பதோ பொருத்தமான அணுகுமுறையாகாது. தமிழக மீனவர் (தமிழர்) என்பதற்காகவே மொட்டையடிக்கப்பட்டனர் என்பதையும் நோக்க வேண்டும். இந்த விடயத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளை அணுகிக் காலத்தை விரயாமாக்குவதையும் கைவிடவேண்டும். ஏனெனில் அவர்கள் தமக்கென்ன லாபமெனக் கேட்கும் கூட்டமாகிப் பல்லாண்டுகளாகிவிட்டது. சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில, மத்திய அரசுகள் ஊடாக ஒரு எல்லைதாண்டாத வகையில் கட்டுப்படுத்தும் பொறிமுறையொன்றைக் கண்டடைவதே இருகரையிலும் தொழில் செய்யும் மீனவர்களுக்கு நன்மைபயக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இன்னுமொரு தேர்தல் பகிடி
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 1 reply
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.